இந்தியா

முன்பதிவு செய்த டிக்கெட் எத்தனை நாட்களுக்கு செல்லும்? திருப்பதி தேவஸ்தானம் தகவல்!

Published

on

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டு அதன் பின்னர் கனமழை காரணமாக வர முடியாதவர்கள் அந்த டிக்கெட்டை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பதியில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது என்பதும் திருப்பதி கோவிலை சுற்றி தேங்கியுள்ள தண்ணீர் காரணமாக பக்தர்கள் கடும் அவதி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மழை காரணமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என்பதால் அந்த டிக்கெட்டின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பதியில் பெய்த கன மழையால் ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் முன்பதிவு செய்து வர முடியாத பக்தர்கள் ஆன்லைனில் 6 மாதங்களுக்குள் வேறு தேதி மாற்றி தரிசனம் செய்ய தேவஸ்தான இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் ஆன்லைனில் ஏழுமலையானை தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version