தமிழ்நாடு

பாஜகவில் இணைந்த திமுக எம்.எல்.ஏ: தேர்தல் நேரத்தில் பரபரப்பு!

Published

on

திமுக வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், திமுக எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் என்பவர் மீண்டும் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி இம்முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் சரவணன் எம்.எல்.ஏ அதிர்ச்சி அடைந்த நிலையில் திடீரென அவர் சற்று முன்னர் பாஜக மாநில தலைவர் எல் முருகன் அவர்களை சந்தித்து தன்னை இணைத்துக் கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ செல்வம் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்து கொண்டார் என்பது தெரிந்ததே. தற்போது திருப்பரங்குன்றம் எம்எல்ஏவும் இணைந்து உள்ளதை அடுத்து இரண்டு திமுக எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

seithichurul

Trending

Exit mobile version