தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து: இந்து சமய அறநிலையத்துறை அதிரடி

Published

on

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 3 வகையான கட்டண தரிசன அமலில் இருந்த நிலையில் அதில் இரண்டு வகையான கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் 20 ரூபாய், 100 ரூபாய், 250 ரூபாய் என 3 கட்டண தரிசனங்கள் இருந்தன. இதில் 20 ரூபாய் மற்றும் 250 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் 100 ரூபாய் மற்றும் பொது தரிசன முறை மட்டுமே அமலில் இருக்கும் என்றும் இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து சமய இதுகுறித்து திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்செந்தூர் திருக்கோவிலில் நீதிமன்ற உத்தரவுபடி, இந்துசமய ஆணையர் சில நிபந்தனைகளை உத்தரவாக பிறப்பித்தார்கள். இதன்படி ஏற்கனவே நடைமுறையில் உள்ள ரூ.250 கட்டணமும், ரூ.20 கட்டணம் ஆகிய இரு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது. ரூ.100 கட்டணம் மற்றும் பொதுதரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும்.

இந்த தரிசன முறையிலும் மூலவரை இரு வரிசையில் வருபவர்களும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசன முறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கோவிலில் திரிசுதந்திரர்களை கட்டுப்படுத்தும் வகையில் பல நிபந்தனைகளுடன் கூடிய உரிமைகளை வழங்கும் வகையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு உதவும் வகையில் இருக்கும். அதே போல் கோவில் பாதுகாப்பு பணியில் 125 ஆயுதபடை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

இதில் முதற்கட்டமாக 60 பேர் ஈடுபட உள்ளனர். ரூ.100 கட்டணம் தரிசனம் மற்றும பொது தரிசன முறையில் வரும் பக்தர்கள் மகா மண்டபத்தில் ஒரே வழியில் அனைத்து பக்தர்களும் சமமமாக சென்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version