தமிழ்நாடு

நான் பாலியல் தொழிலில் ஈடுபட்டேனா? டிக்டாக் பிரபலம் சூர்யா காட்டம்

Published

on

பாலியல் தொழிலில் நான் ஈடுபடவில்லை என்று டிக்டாக் பிரபலம் சூர்யா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் மஜாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக வந்த புகாரையடுத்து விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்பட்டனர்.

தொடர்ந்து நடந்த அதிரடி சோதனையில் டிக்டாக் புகழ் சூர்யா, புரோக்கர் தினேஷ் என 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் டிக்டாக் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய சூர்யா, ‘நான் மசாஜ் சென்டரில் இருந்தது உண்மை தான். ஆனால் பாலியல் தொழில் எதுவும் செய்யவில்லை. அந்த மசாஜ் சென்டர் என்னுடைய நண்பருடையது தான்.

பணம் வாங்குவதற்காக அங்கு சென்றிருந்தேன். மற்றபடி அந்த மசாஜ் சென்டரில் தவறு எதுவும் நடைபெறவில்லை. கொரோனா பரிசோதனைக்காக போலீஸ் கஸ்டடியில் இருந்தேன். அவ்வளவு தான்’ இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version