சினிமா செய்திகள்

டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?

Published

on

டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர்கள் பலர். அதில் ஒரு ஜி.பி.முத்து, இவரைப் பற்றி பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லது இவரது வீடியோக்களை பார்த்து இருப்பீர்கள்.

சமீபத்தில் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதில் டிக்டாய் செயலியும் ஒன்று அதற்காக மிகவும் வருத்தப்பட்ட ஜி.பி.முத்து பிரதமர் மோடிக்கு டிக்டாக் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

டிக்டாக்கில் சீரியஸான விஷயங்களுக்கு இவர் பேசும் கருத்துக்கள், பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்கும். இதுவே இவர் டிக்டாக்கில் புகழ் பெற்றதற்கு முக்கிய காரணம்.

தற்போது டிக்டாக்குக்கு தடை உள்ளதால், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற பிற சமூக வலைத்தளங்கள் வீடியோ வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் ஜி.பி.முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வைரலானது. இதுகுறித்து விசாரித்த போது ஜி.பி.முத்துக்குக் கடந்த சில நாட்களாகத் தீராத வயிற்று வழி இருந்ததாகவும், அதை சமாளிக்க முடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தியைக் கேட்ட ஜி.பி.முத்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version