தமிழ்நாடு

டிக் டாக் புகழ் ரவுடி பேபி பாலியல் வழக்கில் கைது!

Published

on

டிக் டாக் வீடியோக்கள் மூலம் புகழ் பெற்றவர் ரவுடி பேபி சூர்யா. அண்மையில் வனிதா திருமண விஷயத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் திருச்சியில் ஸ்பா என்ற பெயரில், பெண்களை வைத்து பாலியல் தொழில் ஈடுபட்டதாக ரவுடி பேபி சூர்யா மற்றும் 10-க்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

இன்று திருச்சியில் உள்ள மசாஜ் மையங்களில் நடத்தப்பட்ட தொடர் சோதனையில், 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து 20-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சோதனையின் போது பிடிபட்ட ரவுடி பேபி சூர்யா, தான் பாலியல் தொழில் ஈடுபடவில்லை. அந்த ஸ்பாவுக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்துள்ளார். ஆனால் காவல் துறையினர் இவரிடம் தொடர் விசாரணை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version