தமிழ்நாடு
டிபன் பாக்ஸ் வெடி குண்டு: 3 மாணவர்கள் படுகாயம்
![tiffin box bomb - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/tiffin-box-bomb.jpg)
சிவகங்கை மாவட்டத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சிவகங்கை அருகே கீழக்குளம் என்ற கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் டிபன் பாக்ஸ் ஒன்று அனாமத்தாக இருந்தது. அங்கு உள்ள தொடக்கப்பள்ளியில் பாழடைந்த வளாகத்தில் கடந்த இந்த டிபன் பாக்சை மூன்று சிறுவர்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த டிபன் பாக்ஸ் திறக்க முடியாமல் இருந்ததை கண்ட சிறுவர்கள் திறக்க முயற்சி செய்து அதன் பின்னர் முடியாததால் தூக்கி எறிந்தனர்
அப்போது அந்த டிபன் பாக்ஸ் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது இந்த விபத்தில் ராம்கிஷோர், நவீன்குமார், வைணவன் ஆகிய மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
பள்ளி வளாகத்தில் டிபன் பாக்ஸில் வெடிகுண்டு எப்படி வந்தது என்பது குறித்து சிவகங்கை மாவட்ட டிஎஸ்பி விசாரணை செய்து வருகிறார் என்பதும் சம்பவ இடத்தில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.