இந்தியா

லாட்ஜில் சுரங்கம் அமைத்து விபச்சாரம்: 3 பெண்கள் உள்பட 5 பேர் பிடிபட்டனர்!

Published

on

கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் என்ற பகுதியில் சினிமாவில் வருவதுபோல் லாட்ஜ் ஒன்றில் சுரங்கம் அமைத்து அதில் விபச்சாரம் நடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் என்ற நகரில் உள்ள லாட்ஜில் விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அந்த லாட்ஜை சோதனை செய்த போது எந்த விதமான ஆதாரமும் சிக்கவில்லை.

இதேபோல் இரண்டு மூன்று முறை போலீசார் வந்து ஏமாந்து திரும்பி சென்ற நிலையில் அடுத்த கட்டமாக அந்த லாட்ஜில் ரகசிய அறை இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் மீண்டும் நடந்து சென்று ரகசிய அறையை கண்டுபிடித்து அதை திறந்து அதில் இருந்த மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் விபச்சாரம் செய்து கொண்டு நோய் கண்டுபிடித்தனர்.

இதில் விசாரணை செய்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு பெண் தப்பி ஓடிவிட்ட நிலையில் மீதி உள்ள 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுரங்கம் அமைத்து விபச்சாரம் நடத்திய விடுதி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

சினிமா காட்சி போல் பரபரப்பாக உள்ள இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version