தமிழ்நாடு

ரயில் வந்தது கூட தெரியாமல் செல்பி எடுத்த இளைஞர்கள்: அடையாளமே தெரியாமல் துண்டுதுண்டாக சிதறி பலி

Published

on

செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் ரயில் வந்தது கூட தெரியாமல் 3
இளைஞர்கள் செல்பி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது ரயில் மோதி துண்டு துண்டாக சிதறி பலியாகிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் அருகே அசோக்குமார், மோகன் மற்றும் பிரகாஷ் ஆகிய மூன்று பேர்கள் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை அவ்வப்போது பதிவுசெய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை மூவரும் ரயில் பாதையில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். மூவரும் சேர்ந்து செல்பி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று செல்லக் கூடிய விரைவில் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே அசோக், மோகன், பிரகாஷ் ஆகிய மூவரும் உடல் துண்டு துண்டாக சிதறி பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனே சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மூவரும் ஒரே தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் என்பதும் அவ்வப்போது செல்பி வீடியோவை ஆபத்தான நிலையில் எடுத்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது .

ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து உலகில் பல உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த விழிப்புணர்வுகளை அவ்வப்போது சமூக ஆர்வலர்கள் எழுப்பிய போதிலும் தற்போது மேலும் மூன்று உயிர்கள் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version