வணிகம்
ரூ.120 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்; இந்தியாவில் பொருளாதாரம் மந்த நிலையில்லை: மத்திய அமைச்சர்
இந்தியாவில் அக்டோபர் 2-ம் தேதி வெளியான திரைப்படங்கள் 120 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதால், இந்தியாவில் பொருளாதாரம் மந்தநிலை ஏதுமில்லை என்று மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரதாசாத் கூறியுள்ளார்.
மும்பையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், “அடல் பிகாரி வாஜ்பாய் இந்திய பிரதமராக இருக்கும் நான் மத்திய தகவல் மற்றும் தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தேன். எனக்குத் திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்கும். திரைப்படத்துறையில் மிகப் பெரிய வர்த்தகம் நடைபெறுகிறது.
அண்மையில் வெளியான பல அறிக்கைகள் இந்தியாவில் பொருளாதாரம் சரிந்து வருகிறது என்று கூறுகின்றன. ஆனால் அக்டோபர் 2-ம் தேதி மூன்று படங்கள் வெளியாகின. அன்று ஒரு நாளில் மட்டும் இந்த படங்கள் 120 கோடி ரூபாய் இந்தியாவில் வசூல் செய்துள்ளன. அக்டோபர் 2-ம் வார், சைரா மற்றும் ஜோக்கர் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வந்தன. இந்த திரைப்படங்களின் வருமானத்தைப் பார்க்கும் போது இந்தியாவில் பொருளாதார மந்தநிலை உள்ளதாகத் தெரியவில்லை.
தேசிய புள்ளியில் அலுவலகம் வெளியிட்ட அறிக்கைக்கு, பொருளாதாரம் சீராக இருப்பதற்கான 10 அளவுருக்களைக் அளித்திருந்தேன். ஆனால் அதில் ஒன்று மட்டுமே இடம்பெற்றுள்ளது. எனவே அது தவறான அறிக்கை என்று என்னால் கூற முடியும்.
மேலும் இந்தியாவில் 45 வருடங்கள் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால் நிதி ஆயோக் தலைவர் ராஜிவ் குமார் அது இறுதி அறிக்கையில்லை. மாதிரி அறிக்கை என்று கூறியுள்ளார்” என ரவி ஷங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
ஆனால், வெள்ளிக்கிழமை வெளியான தொழிற்சாலை உற்பத்தி குறியீட்டுத் தரவில், இந்திய தொழிற்சாலைகள் உற்பத்தி (-)1.1 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்திருந்தது. முதலீட்டாளர்கள் சேவை நிறுவனமான மூடிஸ் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 6.2 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாகக் குறைத்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.