தமிழ்நாடு

திறக்கப்படுகிறது பூண்டி, சோழாவரம், செம்பரப்பாக்கம் ஏரிகள்; எழுப்பப்பட்டது முதல் எச்சரிக்கை ஒலி

Published

on

செம்பரம்பாக்கம் ஏரியில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் உபரி நீர் திறக்கப்படும் உள்ளதை அடுத்து முதல் எச்சரிக்கை ஒலி எழுப்புவது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதும், குறிப்பாக நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக 23 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையை அடுத்த செம்பரப்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக உபரிநீர் இன்று மதியம் ஒன்று முப்பது மணிக்கு திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித் துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் சற்று முன்னர் உபரி நீர் திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை ஒலி பரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாறி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். அதேபோல் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் உள்ளதாகவும் ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 1585 கடல் நீர் வந்து கொண்டிருப்பதை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 1,200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சென்னையில் கனமழை காரணமாக மிதந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஏரிகள் அடுத்தடுத்து திறக்கப்பட உள்ளது எடுத்து மேலும் வெள்ள நீர் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version