கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் இணையும் 3 ஐபிஎல் வீரர்கள்!

Published

on

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் அபாரமாக தங்கள் திறமையை வெளிப்படுத்திய மூன்று வீரர்கள் வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக்கோப்பை போட்டி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த போட்டியில் விளையாடும் அணிகளின் வீரர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச முடியாத நிலையில் இருப்பதால் அவருக்கு பதிலாக வேறு வீரரை தேர்வு செய்ய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனை அடுத்து ஐபிஎல் போட்டியில் விளையாடிய 3 வீரர்களை ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிலேயே இருக்க இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் டெல்லி அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் ஆவேஷ்கான். இவர் ஐபிஎல் போட்டியில் 15 போட்டிகளில் விளையாடி இருபத்தி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்றும் குறிப்பாக ஃபுல் டாஸ் மற்றும் யார்க்கர்களை மிக அபாரமாக வீசுகிறார் என்றும் 140 முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் இவரது பந்துவீச்சு தட்டையான ஆட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்த உதவுவார் என்றும், இவர் நெட் பவுடராக இந்திய அணியில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் கொல்கத்தா அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மற்றும் பந்து வீச்சாளரான வெங்கடேச அய்யர் இந்திய அணியில் மாற்று வீரராக இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில போட்டிகளில் வெங்கடேச அய்யர் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அசத்தி உள்ளதால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தொடர்ந்து ஐக்கிய அரபு நாட்டிலேயே இருக்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் இந்திய அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version