தமிழ்நாடு
3 திமுக வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி: போட்டியின்றி தேர்வாகும் சுயேட்சைகள்!
மூன்று திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியின் உள்ளாட்சி தேர்தலில் 3 திமுக வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வேட்பாளர்களுக்கு முன்மொழிந்தவர் கையெழுத்து போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த மூன்று வார்டுகளிலும் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
கோவில்பட்டி அருகே பேரூராட்சியில் 1-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெயராஜ், இரண்டாவது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் சண்முக லட்சுமி மற்றும் 11வது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் சின்னதுரை ஆகியோர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
தங்களுடைய வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக வேட்பாளர்கள் போராட்டம் நடத்தி அதன் பின் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட நாகராஜா, ராஜேஸ்வரி, சிவக்குமார் ஆகியவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது