செய்திகள்

சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து – உயிரிழப்பு 3ஆக அதிகரிப்பு

Published

on

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டு பாண்டுரங்கன் தெருவில் வசிக்கும் பத்மநாபன் என்பவரின் வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், அவரின் வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தது. இந்த இடிபாடுகளில் பலரும் சிக்கி கொண்டனர்.

தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் ராஜலட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். அவரின் உடல் மீட்கப்பட்டது. மேலும், இடிபாடுகளில் சிக்கிய 7 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடுபாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளனர். குறிப்பாக ஒரு குழந்தை உட்பட 5 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மேலும், 2 பேரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

Trending

Exit mobile version