தமிழ்நாடு

மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு 3 துறைகள்: என்னென்ன துறைகள் தெரியுமா?

Published

on

தமிழக பாஜக தலைவராக இருந்து வரும் எல் முருகன் அவர்கள் நேற்று மத்திய அமைச்சராக பதவியேற்றார் என்பது தெரிந்ததே. எல் முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது அனைத்து தரப்பினருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவருக்கு முக்கிய விழாக்கள் ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் முருகனுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. மத்திய இணை அமைச்சராக முருகன் பொறுப்பேற்று உள்ளார் என்ற நிலையில் அவருக்கு மீன்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்பு, கால்நடை மற்றும் பால்வளம் உள்ளிட்ட மூன்று துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று துறைகளுக்கும் எல் முருகன் அவர்கள் தான் இணை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகனுக்கு முக்கிய மூன்று துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளதால் தமிழக பாஜகவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். குறிப்பாக மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளம் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை துறை சம்பந்தமான பணிகளை தமிழகத்தில் அவர் செய்வார் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version