இந்தியா
மல்லையாவை விட 10 மடங்கு அதிக மோசடி… சிக்கலில் அனில் அம்பானி
விஜய் மல்லையா, நீரவ் மோடி என அத்தனைப் பேரையும் மிஞ்சும் வகையில் அனில் அம்பானி அதிகப்படியான மோசடி செய்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் உட்பட மூன்று நிறுவனங்கள் மீது வங்கிகள் மோசடி புகார்களைப் பதிவு செய்துள்ளன. சுமார் 86,188 கோடி ரூபாய்க்கு அனில் அம்பானி மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது விஜய் மல்லையா, நிரவ் மோடி செய்த மோசடிகளை விட 10 மடங்கு அதிகமாம்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய மூன்று வங்கிகள் இந்த பண மோசடி குற்றச்சாட்டை சுமத்தி உள்ளன. அனில் அம்பானியின் 3 நிறுவனங்கள் மீது எழுந்துள்ள மோசடி புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்படும் எனத் தெரிகிறது.