தமிழ்நாடு

மனைவியை மிரட்ட தற்கொலை நாடகமாடிய கணவர் உயிரிழப்பு!

Published

on

திருப்பூர் அருகே மனைவியை மிரட்ட தற்கொலை நாடகமாடிய கணவர் ஒருவர் உண்மையிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் என்ற பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் தனது மனைவியை மிரட்ட விளையாட்டாக கிணற்றுக்குள் விழுந்து விடப் போவதாக கூறி பயமுறுத்தினார். மேலும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 70 அடி ஆழ கிணற்றில் அருகே தற்கொலை செய்ய போவதாக மனைவியை மிரட்டி கொண்டிருந்த லோகநாதன் திடீரென தடுமாறி கிணற்றில் விழுந்தார். இந்த நிலையில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த லோகநாதனை மீட்க காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மீட்பு படையினர் விரைந்து வந்து 70 அடி ஆழத்தில் உள்ள கிணற்றில் விழுந்த லோகநாதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் ஒரு மணி நேர போராட்டத்திற்குபின் லோகநாதனை மீட்டு வெளியே கொண்டு வந்தபோது அவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.

மனைவியை மிரட்டுவதற்காக விளையாட்டாக கிணற்றில் குதிக்க போவதாக மிரட்டிய நபர் உண்மையாகவே உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version