தமிழ்நாடு

தமிழக ஆளுநரை ஆபாசமாக வசை பாடி மிரட்டல் கடிதம்!

Published

on

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் உள்ளார். இவரை ஆபாசமாக வசை பாடியும், ஆளுநர் மாளிகையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 21-ஆம் தேதி தமிழக ஆளுநர் மாளிகைக்கு ஒரு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் சரவண பிரசாத் என்ற நபர் அனுப்பியதாக போலியாக முகவரி உள்ளது. அந்த கடிதத்தில் தமிழக ஆளுநட் மாளிகையை குண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும், ஆளுநரை சுட்டு விடுவதாகவும், ஆளுநர் குறித்து ஆபாசமாக தரக்குறைவான வார்த்தைகளும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த கடிதத்தில், அமைச்சர்களை கொன்றுவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கிண்டி போலீசார் இந்த கடிதத்தை அனுப்பிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். எந்த அஞ்சல் நிலைய முகவரியில் இருந்து இந்த கடிதம் அனுப்பப்பட்டது என்பதை விசாரித்து வரும் காவல்துறை கொலை மிரட்டல், அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மரம நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version