தமிழ்நாடு

மீண்டும் ‘பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்’: திமுக வேட்பாளரின் வாக்குறுதியால் பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

மீண்டும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை கொண்டு வருவேன் என ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளர் எழிலன் வாக்குறுதி அளித்திருப்பது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை வழக்கில் போலீசார் மட்டுமின்றி பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரும் உடந்தை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.

போலீஸ்காரர்களை விட அதிக அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு பொதுமக்களை மிரட்டி வந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை விதிக்கப்பட்டது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக எழிலன், மீண்டும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை கொண்டு வருவேன் என வாக்குறுதி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பூ பெண்களின் வாக்குகளை கவர பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திமுக வேட்பாளர் எழிலன் வெளியிட்டு வருவதால் அந்த தொகுதியில் குஷ்பு கிட்டத்தட்ட வெற்றி பெற்று விட்டதாகவே பாஜகவினர் கூறி வருகின்றனர்.

Trending

Exit mobile version