வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலை!

Published

on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியிடங்கள் 22 உள்ளது. அலுவலக உதவியாளர், மசால்ஜி மற்றும் அலுவலகக் காவலர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 22

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Office Assistant – 15
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000

வேலை: Masalchi – 01
வேலை: Watchman – 06
கல்வித்தகுதி: தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/kanchipuram என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து சுய சான்றொப்பமிடப்பட்ட வயது, சாதி, தகுதி, தொழிற்கல்வி தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றில் ஏதாவது இரண்டின் புகைப்பட நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தலைமை குற்றவியல் நடுவர் அவர்கள், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்(இருப்பு) செங்கல்பட்டு.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://districts.ecourts.gov.in/sites/default/files/Criminal%20Unit%20Recruitment%20May%202019_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 03.06.2019

seithichurul

Trending

Exit mobile version