தமிழ்நாடு

ஈரோட்டை திமுக கோட்டையாக மாற்றிக் காட்டுவோம்: திமுவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம்

Published

on

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில், ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் திமுகவில் இன்று இணைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதேபோல மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நாமக்கல் மாவட்ட அதிமுக அவைத்தலைவரும், அதிமுக சட்டமன்ற குழுவின் முன்னாள் தலைவருமான பி.ஆர்.சுந்தரம் இன்று திமுகவில் இணைந்தார்.

இணைப்பை அடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தோப்பு வெங்கடாசலம், ‘ஸ்டாலின் சமூக நீதி காத்த வீரராக விளங்கிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலினின் அரசியல் பாங்கு மிக வித்தியாசமாக இருக்கிறது. அவர் பழிவாங்கும் மனப்பான்மையோடு ஆட்சி நடத்தவே இல்லை.

இளைஞர்களை கவருக் கூடிய ஒரே தலைவராக இருக்கிறார் ஸ்டாலின். எனவே தான் ஈரோட்டில் இருந்து பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் இன்று திமுகவில் இணைந்து உள்ளார்கள். வரும் காலத்தில் ஈரோட்டை திமுகவின் எஃகு கோட்டையாக மாற்றுவதற்கு நாங்கள் பாடுபடுவோம். அதற்கு உறுதி ஏற்றுள்ளோம்.’ என்று தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version