தமிழ்நாடு
எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு விழுகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இன்று காலை முதலே மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆங்காங்கே வாக்களிக்கும் இயந்திரம் கோளாறு என்ற புகார்கள் வருகின்றன.
இதனால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க கூடிய சூழலும், வாக்களிக்காமல் திரும்பி செல்லும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு விழுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டுகிறார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுகவின் பொ.சந்திரசேகர் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் சூழலில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு விழுவதாக கூறப்படுகிறது என தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.