சினிமா செய்திகள்

எம்ஜிஆர் பேச்சை கேட்காததால் தற்கொலை செய்து கொண்ட நடிகை: தியாகராஜன் கூறிய திடுக் தகவல்

Published

on

எம்ஜிஆர் பேச்சை கேட்காததால் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் தியாகராஜன் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரசாந்த் நடிப்பில் உருவாகிவரும் அந்தகன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் தியாகராஜன். இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தியாகராஜன் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு எம்ஜிஆர் அறிவுரை கூறியதாகவும் ஆனால் அந்த அறிவுரையை அவர் ஏற்க வில்லை என்றும், அதனால் அவரது முடிவு தற்கொலையில் முடிந்தது என்றும் கூறியுள்ளார் .

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனுக்கு ஜோடியாக சில்க் ஸ்மிதா நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றி விழாவில் எம்ஜிஆர் கலந்து கொண்டபோது சில்க் ஸ்மிதா ஒரு மிகச் சிறந்த நடிகை என்றும், அவர் குணசித்திர கேரக்டரில் கவனம் செலுத்தலாம் ஒரு பாடலுக்கு நடனமாடுவதை நிறுத்திவிடலாம் என்று எம்ஜிஆர் அப்போது அறிவுரை கூறினார்.

அவரது அறிவுரையின்படி குணசித்திர கேரக்டரை சில்க் ஸ்மிதா ஃபாலோ செய்து இருந்தால் அவருடைய திரை உலக வாழ்க்கை உச்சத்திற்கு சென்று இருக்கும் என்றும் ஆனால் அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதில் மட்டுமே கவனம் செலுத்தியதால் அவரது வாழ்க்கையும் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் வரை சென்று விட்டது என்றும் தியாகராஜன் கூறியுள்ளார். இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version