தமிழ்நாடு

மீண்டும் ஆல்பாஸ்? 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்தா?

Published

on

கொரோனா வைரஸ் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ் செய்யப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து மீண்டும் நேரடி வகுப்புகள் ஆரம்பம் ஆனது என்பதும் இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை உறுதிபட கூறியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மீண்டும் மாணவர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ் செய்திட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா பாதிப்பு மட்டுமின்றி ஓமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருவதை அடுத்தே பள்ளிக்கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

இருப்பினும் பொதுத்தேர்வு நடைபெறும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் உள்ள கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நிலவரத்தைப் பொறுத்தே பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் இல்லாவிட்டால் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version