Connect with us

தமிழ்நாடு

“சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவில் இதுதான் நடக்கும்” – சொல்கிறார் ஸ்டாலின்!

Published

on

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு சசிகலா திட்டம் போட்டார். அதற்குள் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து, சசிகலா குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

இதனால் அவரது முதல்வர் கனவு தகர்ந்தது. தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். அப்படி சிறைக்குச் சென்றவர் வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாகி வெளியே வருகிறார்.

அவர் வெளியே வந்ததும் அதிமுகவில் ஒரு பூகம்பமே வெடிக்கும் என்று பலரும் ஆருடம் சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான மு.க.ஸ்டாலினும் கருத்து கூறியுள்ளார்.

அவர் திமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘மக்கள் கிராம சபைக் கூட்டத்தில்’ உரையாற்றிய போது, ‘சசிகலா, 27ந் தேதி வெளிய வருது. அன்னைக்கே அவங்க சென்னைக்கு வருவாங்கன்னு சொல்றாங்க. அவங்க வந்த உடனே இந்த ஆட்சி இருக்குமான்னு தெரியாது. அவங்க வெளிய வந்து 4 நாள் கூட பொறுத்திருக்க வேண்டாம். அன்னைக்கே இந்த ஆட்சி இருக்குமான்றது சந்தேகந்தான். அப்படியான நிலைமையில தான் இந்த ஆட்சி நடந்திட்டு இருக்கு.

நமக்கான இலக்கு ரொம்ப தெளிவா இருக்கு. கூடிய விரைவில தேர்தல் வரப் போகுது. அந்த தேர்தல்ல திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கணும்னு மக்கள் விரும்புறாங்க. அந்த வெற்றிக்கு நாம எல்லாரும் அயராது பாடுபடுவோம்’ என்று பேசி முடித்தார்.

முன்னதாக சசிகலா விடுதலையாகி வந்தால் அதிமுகவில் தாக்கம் ஏற்படுமா என்பது குறித்துப் பேசிய தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ‘சசிகலா, மீண்டும் அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பு என்பதே கிடையாது. அவர் கட்சியிலேயே இல்லை. அதைப் போல தினகரனும் அதிமுகவில் இல்லை. அதிமுக என்பது பெரிய இயக்கம். இதில் பலர் வரலாம், போகலாம். ஆனால், கட்சி இருக்கும்.

தினகரனை, ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். அவர் உயிருடன் இருக்கும் வரை தினகரனை அதிமுகவில் சேர்க்கவே இல்லை’ எனக் கூறினார்.

அதே நேரத்தில் அதிமுகவின் ஒரு தரப்பினர், சசிகலாவுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் அதிமுகவில் தற்போது உட்கட்சிப் பூசல் நடந்து கொண்டிருக்கிறது.

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!