சினிமா செய்திகள்
சின்மயி சேலை அணியாததற்கு இதுதான் காரணமாம்!
மீடூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது கடும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் சின்மயி. ஆனால், பாலிவுட் அல்லது ஹாலிவுட்டை போல மீடூ விவகாரம் இங்கு பெரிதாக எடுபடவில்லை.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை சின்மயி கிளப்பியுள்ளார். சின்மயியின் ரசிகர் ஒருவர், அவரது ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் அழகாக பாடுகிறீர்கள், ஏன் நமது இந்திய கலாசார உடையான சேலையை அணிந்து கொண்டு பாடினால் இன்னும் அழகாக இருக்குமே என கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு, பதிலளித்த சின்மயி, “நான் சேலை அணிந்து பாட்டு பாடினேன், ஆனால், சில பேர் என்னுடைய இடுப்பு தெரியும்படியான புகைப்படத்தையும் எனது மாராப்பு பகுதியையும் படம் பிடித்துக் கொண்டு, சில ஆபாச வலைதளங்களில் அதனை பதிவேற்றி மாஸ்டர்பேட் செய்வதாக, எனக்கு வந்த தகவலை அடுத்து, நான் சேலை அணிந்து பாடுவதை நிறுத்திக் கொண்டேன்” என அவர் செய்த ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.