சினிமா செய்திகள்

இந்த வார தலைவருக்கான டாஸ்க்: தாமரை கேட்ட நெத்தியடி கேள்வி!

Published

on

இந்த வார தலைவருக்கான டாஸ்க்கின்போது தாமரை பிரியங்காவிடம் நெத்தியடி கேள்வி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை புதிய தலைவருக்கான டாஸ்க் போட்டியாளர்களுக்கு வைக்கப்படும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று கேப்டன் டாஸ்க்கில் வருண், தாமரை, இமான், அக்ஷரா மற்றும் ராஜு ஆகியோர்களுக்கு ஒரு பெட்டியில் அதிக அளவு பஞ்சு நிரப்ப வேண்டும் என்ற டாஸ்க் வைக்கப்படுகிறது.

இந்த டாஸ்க்கை அனைவரும் விறுவிறுப்பாக செய்து கொண்டிருக்கையில் திடீரென தாமரையை வம்புக்கு இழுக்கும் வகையில், ‘நீ தலைவராகி என்ன செய்யப் போகிறாய்? என பிரியங்கா கேள்வி கேட்டார். அதற்கு நெத்தியடி பதிலாக, ‘நீங்கள் தலைவராகும்போது சொல்லிவிட்டா தலைவர் ஆனீர்கள்’ என கேட்டது பார்வையாளர்களுக்கு மற்றும் என்று சக போட்டியாளர்களுக்கும் ஆச்சரியத்தை கண்டிப்பாக அளித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தாமரை போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்பதும் புதிய தலைவர் யார் என்பது அடுத்தடுத்த புரமோவில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version