Connect with us

இந்தியா

ரோபோ மனிதன் கேள்விப்பட்டதுண்டு.. ரோபோ யானையை பார்த்ததுண்டா? கேரள கோவிலில் ஒரு ஆச்சரியம்..!

Published

on

தற்போது மனித வாழ்க்கையில் ரோபோ பல இடங்களில் இடம்பெற்று வருகிறது என்றும் மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்கள் பல வேலைகளை சுலபமாக செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் மனித ரோபோக்கள் மட்டுமின்றி விலங்குகளின் ரோபோக்கள் செய்யும் நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பீட்டா அமைப்பு யானை ரோபோவை கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு பரிசாக அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவில் உள்ள கோவில் விசேஷம் என்றால் யானை இல்லாமல் இருக்காது என்பதும் கேரள கோவில் விசேஷங்களில் யானை முக்கிய இடம் பிடித்துள்ளது என்பது தெரிந்ததே. ஆனால் யானைகள் கட்டி வைக்கப்பட்டு பாகன்களால் துன்புறுத்தப்படுவதாகவும் காட்டில் சுதந்திரமாக இருக்க வேண்டிய விலங்கு மனிதனால் சிறைப்பட்டு இருப்பதாகவும் பீட்டா அமைப்பு கருத்து தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள இரிஞ்ஞாடப்பிள்ளி ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ரோபோ யானை ஒன்றை உருவாக்கி பீட்டா அமைப்பு பரிசாக அளித்துள்ளது. 800 கிலோ எடை கொண்ட இந்த யானை ரப்பர் கோட்டிங் மற்றும் அயன் பிரேம் கொண்டு அச்சு அசலாக பார்ப்பதற்கு நிஜ யானை போலவே இருக்கின்றது என்பதும் காதுகளை ஆட்டிய வண்ணம் இருக்கும் இந்த யானை மின்சாரத்தால் இயக்கப்படுவதாகவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த யானை மீது நான்கு பேர் உள்ளாரை அமர்ந்து கொள்ளலாம் என்றும் இந்த யானையால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த யானையை செய்வதற்கு 5 லட்ச ரூபாய் செலவாகி உள்ளது என்றும் இந்த யானையை அனைத்து கோவில்களிலும் பயன்படுத்துவதன் மூலம் நிஜ யானை துன்புறுத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

யானைகள் என்பது ஒரு சமூக வாழ் உயிரினம் என்றும் அது தங்கள் குடும்பத்தோடு காடுகளில் வாழ வேண்டிய விலங்கினம் என்றும் அந்த யானையை மனிதர்கள் கோவில் விசேஷங்களுக்காக ஆண்டு கணக்கில் கட்டி வைத்து துன்புறுத்துவதை ஏற்க முடியாது என்றும் அதற்காகத்தான் இந்த புதிய ரோபோ யானையை உருவாக்கியுள்ளோம் என்றும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஏற்பாடுகளுக்கு நடிகை பார்வதி உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!