சினிமா செய்திகள்
பாகுபலிக்கு பிறகு மான்ஸ்டர் படத்துக்குத்தான் இந்த ரெஸ்பான்ஸ் – எஸ்.ஜே. சூர்யா நெகிழ்ச்சி!
![201905271923067140_1_sjsuryah-22._L_styvpf - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/05/201905271923067140_1_sjsuryah-22._L_styvpf.jpg)
ஒரு நாள் கூத்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் தியேட்டரில் திருவிழா போல மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. ஆரம்பத்தில், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கலுடன் படம் ரிலீசானதால், ஓபனிங் கிடைக்காத இந்த படத்திற்கு விமர்சகர்கள் கொடுத்த பாசிட்டிவ் கமெண்டுகள் மற்றும் பார்த்தவர்கள் பரப்பிய இலவச புரமோஷன் மூலம் படம் தொடர்ந்து 2 வாரங்களாக அரங்கு நிறைந்த காட்சிகளாக நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய நாயகன் எஸ்.ஜே.சூர்யா, பாகுபலி படத்திற்கு பிறகு தியேட்டரில் தினமும் மக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்வது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. என்னைப் பார்த்த ஒரு குட்டிப் பையன் என்னை எலி மாமா என்றே அழைத்தான். அவனை அருகில் அழைத்து அவனுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளேன். குழந்தைகளின் இந்த அன்புக்கு இதுபோன்று இன்னும் 10 வருடங்கள் படங்கள் பண்ண வேண்டும் என ஆசையாக இருக்கிறது என எஸ்.ஜே. சூர்யா பேசினார்.