தமிழ்நாடு

‘இது ஆரிய – திராவிடப் போருங்க… ஜெயிக்கப் போறது நாங்கதாங்க…’- உதயநிதி பன்ச்

Published

on

திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் முதன்முறையாக தேர்தல் களம் காண்கிறார் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் அவர், ‘எதிர் வரும் தேர்தல் ஆரிய – திராவிடப் போர்’ என்று பிரகடனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, ‘இந்த தேர்தலில் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு மிகப் பிராகசமாக இருக்கிறது. அதிமுக அரசு, கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்துள்ளது. அப்படி இருந்தும் அவர்களால் சாதனை என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. தங்களின் சாதனைகளைச் சொல்லி மக்களிடம் அவர்களால் வாக்கு கேட்க முடியவில்லை. அதனால் தான் திமுக மீதும், எங்கள் தலைவர் மீதும் அவதூறு பரப்பி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலின் போதும் அதிமுக தரப்பு இப்படியான பிரச்சார பாணியைத் தான் கையாண்டது. ஆனால், மக்கள் அப்போதும் அதிமுகவுக்கு சரியான பாடம் புகட்டினார்கள். இந்த முறை திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையிலான போட்டி தான் நிலவுகிறது. இது எங்கள் தலைவர் ஸ்டாலின் சொன்னது போல ஆரிய – திராவிடப் போர் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். யாருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். எனவே நாங்கள் இத்தேர்தலில் நல்ல வெற்றியைப் பதிவு செய்வோம்’ என்றுள்ளார்.

Trending

Exit mobile version