இந்தியா

“மோடிஜி… மோடிஜி… என் தொகுதியில பிரச்சாரம் பண்ணுங்க”- ரிக்வஸ்ட் வைக்கும் திமுக வேட்பாளர்

Published

on

‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று புகழப்படும் கார்த்திகேய சிவசேனாபதி, வரும் தேர்தலில் திமுக சார்பில் தொண்டமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வித்தியாசமான ஓர் வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தொண்டமுத்தூர் தொகுதியில் கார்த்திகேய சிவசேனாபதிக்கு எதிராக அதிமுக தரப்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி களமிறக்கப்பட்டு உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையில் தொண்டமுத்தூர் தொகுதியில் கடும் போட்டி இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் கார்த்திகேய சிவசேனாபதி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கோரிக்கையை ட்விட்டர் மூலம் வைத்துள்ளார். அவர், ‘அன்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களே… தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கும் எஸ்.பி.வேலுமணிக்கு தயவு செய்து நீங்கள் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் தான் அவருக்கு எதிராக நிற்கும் திமுக வேட்பாளர் ஆவேன். அவருக்கு நீங்கள், உங்கள் ஆதரவைக் கொடுத்தால் எனக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி சார்’ என்று கிண்டல் கலந்த தொனியில் பதிவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version