தமிழ்நாடு

ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார்.. ஓ.பன்னீர்செல்வம் பரபர!

திருவாரூர் தேர்தல் காரணமாக தமிழக அரசியல் மிகவும் பரபரப்பாக உள்ளது. ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தேர்தல் நடக்கிறது.

Published

on

சென்னை: ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

திருவாரூர் தேர்தல் காரணமாக தமிழக அரசியல் மிகவும் பரபரப்பாக உள்ளது. ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் எம்ஜிஆர்- அம்மா – தீபா பேரவை நிறுவனர் ஜெ. தீபா இந்த தேர்தலில் போட்டியிடுவார் என்று செய்திகள் வந்தது. இதையடுத்து அடுத்த அதிரடியாக, தற்போது ஜெ. தீபா அதிமுகவில் இணைய போவதாக தகவல்கள் வருகிறது.

ஜெ.தீபாவின் கருத்து குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கருத்து தெரிவித்தார். அதில் ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார். ஜெ.தீபா கட்சியில் இணைய விரும்பினால் சேர்த்துக் கொள்வோம். ஜெ.தீபா உட்பட யார் கட்சியில் இணையம் விருப்பம் தெரிவித்தாலும் சேர்த்துக் கொள்வோம்

அதிமுகவிற்கு யார் வந்தாலும் இணைத்துக்கொள்வோம். திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பெயர் நாளை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் மிகவும் வலுவான வேட்பாளரை களமிறக்க போகிறோம், என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

seithichurul

Trending

Exit mobile version