தமிழ்நாடு
கஜாவின் போதே உதவி இருக்கலாம்.. இப்போ பாருங்க திருவாரூரில் தேர்தல் வந்துட்டு!
சென்னை: கஜா புயல் சேத பாதிப்புகள் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.
கடந்த மாதம் கஜா புயல் தமிழகத்தை தாக்கியது. டெல்டா மாவட்டங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புயல் பாதித்த மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் இந்த மாதம் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் பெரிய அளவில் பாதித்தது. பல ஆயிரக்கணக்கான மரங்கள் கஜா புயலால் திருவாரூரில் விழுந்தது. தென்னை மரங்கள் பல இதில் விழுந்து நாசமாகியது. கஜா இழப்பில் இருந்து இன்னும் விவசாயிகள் மக்கள் வெளியே மீண்டும் வர முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.