தமிழ்நாடு
திருவாரூர் தேர்தலை ஸ்டாலின் நிறுத்த முயற்சி செய்கிறார்.. டிடிவி தினகரன் பரபர
திருவாரூர் தேர்தல் களம் நிமிடத்திற்கு நிமிடம் சூடு பிடித்துக் கொண்டே இருக்கிறது.
![TTV Dinakaran addressing media - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/dinakaran-759-1.jpg)
சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்த முயற்சி செய்கிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தேர்தல் களம் நிமிடத்திற்கு நிமிடம் சூடு பிடித்துக் கொண்டே இருக்கிறது. முக்கியமாக திமுக, அமமுக கடுமையான வார்த்தை போர் நிலவி வருகிறது.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார். சுவாமிமலையில் அவர் பேட்டியளித்தார்.
அதில், கூட்டணி கட்சிகளை வைத்து தேர்தலை நிறுத்த ஸ்டாலின் திட்டமிடுகிறார்.ஆர்.கே நகரில் டெபாசிட் இழந்த கட்சிதான் திமுக.
ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்த திமுக உள்ளிட்ட கட்சிகள் திருவாரூரில் நிற்க பயப்படுகின்றன. அதிமுக, பாஜக என எல்லா கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதற்கு பயப்படுகிறது, என்றுள்ளார்.