தமிழ்நாடு
பின் வாங்கிய அதிமுக.. திருவாரூர் வேட்பாளர் அறிவிப்பு தள்ளிப்போகிறது!
சென்னை: அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் அதிமுக வேட்பாளர் குறித்த அறிவிப்பு தள்ளிப்போகிறது.
திருவாரூர் இடைதேர்தல்தான் தற்போது தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக். இந்த தேர்தலுக்கான வேட்பாளரை திமுகவும், அமமுகவும் இன்று அறிவிக்க உள்ளது. இன்று மாலை இரண்டு கட்சிகளும் அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. கடந்த 3ம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது.
இந்த நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. திருவாரூர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு, மாலை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திருவாரூர் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று நடப்பதாக இருந்தது.