தமிழ்நாடு
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்.. நவம்பரில் நடக்கிறதா ?
சென்னை: திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் நவம்பரில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக எம்எல்ஏ டிகே போஸ் மறைவு காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது. இகடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுக தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார்.
இதனால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இந்த நிலையில் வரும் நவம்பரில் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வதெலுங்கானா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தலோடு இந்த தேர்தலையும் நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.