வேலைவாய்ப்பு
திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் வேலை!
திருவள்ளூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியிடங்கள் 36 உள்ளது. இதில் உதவியாளர், எழுத்தர் வேலைகளை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
நிறுவனம்: திருவள்ளூர் கூட்டுறவு வங்கி
மொத்த காலியிடங்கள்: 36
வேலை: உதவியாளர்
மாத சம்பளம்: ரூ.14,000 முதல் 47,500 + இதர படிகள் வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
வயது: 01.01.2020 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
கட்டணம்: எஸ்சி, எஸ்டி, அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பொதுப் பிரிவைச் சார்ந்த ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tvldrb.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு அரசாணைப்படியான இட ஒதுக்கீடு, இனச் சுழற்சி முறை, அவர்கள் தெரிவித்த முன்னுரிமை விருப்பச் சங்க வகை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://tvldrb.in/doc_pdf/Notification_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.04.2020
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.03.2020