இந்தியா

ஒரு மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கலாம்: சிறப்பு ஏற்பாடு!

Published

on

திருப்பதி ஏழுமலையானை ஒரு மணி நேரத்தில் தரிசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் இருந்து திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர் என்பதும் ஆனாலும் 300 ரூபாய் தரிசன கட்டணம் ஆக இருந்தாலும் இலவச தரிசன கட்டணம் ஆக இருந்தாலும் ஏழுமலையானை தரிசிக்க ஒன்று அல்லது இரண்டு நாள் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பக்தர்கள் உடனடியாக அதாவது ஒரு மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் தற்போது திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஐஆர்சிடிசி உடன் இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி ஐஆர்சிடிசி இணையதளத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் டிக்கெட் விற்பனை ஆகும். அதன் விலை ரூ.999 மட்டுமே. இந்த டிக்கெட்டை வாங்கி பக்தர்களை திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து வேன் மூலம் திருமலைக்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரத்தில் சிறப்பு தரிசனம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகள் ஏற்பாடு செய்து தருகிறார்கள்.

அதுமட்டுமின்றி தரிசனம் செய்து வந்த பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவன உதவியாளரே வாங்கி கொடுப்பார். அதன் பின்னர் மீண்டும் திருப்பதி ரயில் நிலையத்துக்கு அழைத்து வரும் பொறுப்பையும் ஐ.ஆர்.சி.டி.சி எடுத்து கொள்கிறது. இந்த திட்டம் திருப்பதி ஏழுமலையானை ஒரு மணி நேரத்தில் தரிசிக்க உதவி வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Trending

Exit mobile version