சினிமா செய்திகள்
ஒரு நபரின் கையில் எல்லா திரையரங்குகளுமா? உதயநிதியை மறைமுகமாக தாக்கினாரா திருமாவளவன்?
தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் ஒருவர் கையில் சென்றுவிட்டால் ஆபத்தானதாக முடிந்து விடும் என்றும் நான் யாருக்கும் எதிராக பேசவில்லை என்றும் எனக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது என்றும் திரைப்பட விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக திரையுலகை பொறுத்தவரை தற்போது ஒரு நபரின் கையில் தான் இருக்கிறது என்றும் அந்த நபர் விரும்பினால் மட்டுமே ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆக முடியும் என்றும் இல்லையென்றால் ரிலீஸ் தடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ’இரும்பன்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இன்று கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் ஒரு நபர் கையில் திரை திரையரங்குகள் வந்து விட்டால் என்ன ஆகும்? என்று கேள்வி எழுப்பினார்./ மேலும் திரைத்துறை கார்ப்பரேட் மயமாகி வருகிறது என்றும், கார்ப்பரேட் கையில் சினிமா சென்றால், தொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள் இயக்குனர் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் இது தொழில் போட்டி மட்டுமல்ல தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதாகும் என்றும் கூறினார்.
நான் யாருக்கும் எதிராக பேசவில்லை என்றும் எனக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்றும் திரைத்துறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பேசுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலுக்கும், திரை உலகிற்கும் 50 ஆண்டுகால தொடர்பு உண்டு என்றும் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழக முதல்வராகவும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளனர் என்றும் இவர்கள் அனைவரும் சினிமாவில் இது தான் வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
சினிமாவுக்குள் திராவிட அரசியலை கொண்டுவந்தது தமிழகம் என்றும் சினிமாவில் இருந்தவர்கள் 50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் அமர வாய்ப்பு கிடைத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் அழகை காட்டி ஆட்சியை பிடிக்க வில்லை என்றும் அரசியல் பேசினார், அண்ணாவின் கொள்கைகளை பேசினார், சமூக நீதிகளை பேசினார், அதோடு மக்களை அவர் மிகவும் நேசித்தார். அதனால்தான் அவரால் முதல்வராக முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக மாற்றத்திற்கான ஆயுதமாக சினிமாவை மாற்றலாம் என்றும் சினிமா என்பது மிகப்பெரிய ஆயுதம் என்றும் அந்த ஆயுதம் கலையை ரசிக்க மட்டுமின்றி சமூக மாற்றத்திற்கான கருவியாக இருக்க வேண்டும் என்றும தெரிவித்துள்ளார்.