தமிழ்நாடு

பாஜகவை மீண்டும் தூக்கி சுமக்காதீர்கள்: எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் வாழ்த்து கூறி எச்சரிக்கை!

Published

on

அதிமுகவில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அந்த பொதுக்குழு செல்லும் என அறிவித்தது உச்சநீதிமன்றம் இன்று. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் இனிமேல் என்பது உறுதியானதையடுத்து திருமாவளவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

#image_title

இந்த தீர்ப்பை அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் சூழலில் திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் தொல் திருமாவளவன் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து எச்சரிக்கை ஒன்றும் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன், அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜகவை சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே. என்று வாழ்த்து கூறி எச்சரித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version