தமிழ்நாடு

சென்னையில் இதுதான் முதல்முறை: முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் பாராட்டு!

Published

on

சென்னை மேயராக முதல் முறையாக பட்டியல் இன பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளதை அடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஒன்றில் சென்னை மாநகராட்சி மேயர் தொகுதி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு கனிமொழிக்கு வைக்கப்பட்டதாக செக் என கூறப்பட்டபோதிலும் பட்டியலின மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் இதுகுறித்து கூறிய போது, ‘சென்னை உள்பட 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கி, ஆதிதிராவிடர் பெண்கள் ஆகிய விளிம்பு நிலை மக்களை அதிகார வலிமையின் வழி மேம்படுத்தும் ஒரு சமூக நீதி அரசாக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது என பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக பெண்ணொருவர் சென்னை மேயராக வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பை விடுதலை சிறுத்தை கட்சி உங்களை மனமார பாராட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version