சினிமா

தனுஷ் ரசிகர்களை இப்படி ஏமாத்திட்டாரே திருச்சிற்றம்பலம் இயக்குநர்; என்ன ஆச்சு தெரியுமா?

Published

on

நடிகர் தனுஷின் யாரடி நீ மோகினி, உத்தமப்புத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஜவஹர் மித்ரன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனுஷ் உடன் இணைந்து கடந்த ஆண்டு திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.

கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாறன், அட்ரங்கி ரே, நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், தனுஷுக்கு 100 கோடி வசூல் படமாக திருச்சிற்றம்பலம் மாறியது.

#image_title

இந்நிலையில், மித்ரன் ஜவஹர் இன்று காலை ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், இன்று மாலை மிகப்பெரிய அப்டேட் வரப் போகுது என பதிவிட்டு இருந்தார். அந்த ட்வீட்டை பார்த்த தனுஷ் ரசிகர்கள் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ் மீண்டும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என ரொம்பவும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால், மாலை வெளியான அப்டேட் தனுஷ் ரசிகர்களுக்கு ரொம்பவே ஏமாற்றத்தை அளித்துள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் அடுத்ததாக நடிகர் மாதவன் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

#image_title

நடிகர் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி திரைப்படம் கடந்த ஆண்டு இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. ஆனால், மாதவன் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை. பாலிவுட்டில் இன்னொரு படத்திலும் மாதவன் நடித்து இருந்தார். ஆனால், அந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

#image_title

இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு நடிகர் மாதவன் நடித்த படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் செம காமெடியான படத்தின் மூலம் மீண்டும் மாதவன் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version