Connect with us

இந்தியா

இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.. முழு விவரங்கள்!

Published

on

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்வில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் பங்கேற்க உள்ளனர்.

மத்திய அரசின் இந்த புதிய நாடாளுமன்ற கட்டட திட்டத்திற்காக 971 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு கட்டிட பணிகள் நிறைவடையும்.

பூமி பூஜை நிகழ்வு:

1) புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா, இன்று பிற்பகல் 12:55 மணியளவில் நடைபெற உள்ளது.
2) பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா சரியாக 1 மணியளவில் நடைபெறும்.
3) பிரார்த்தனைக் கூட்டமும் மதியம் 1:30 மணி வரை நடைபெறும்.
4) பிரதமர் மோடி 2:15 மணியளவில் உரையாற்றுவார்.
5) சில மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்கள் வீடியோ கன்ஃபரசிங் மூலம் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

பழைய நாடாளுமன்றம் கட்டி முடித்து 100 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது. இந்தியா 75-வது சுதந்திர விழாவைக் கொண்டாடும் போது, நாடாளுமன்ற கூட்டம் புதிய கட்டிடத்தில் நடைபெறும். பழைய நாடாளுமன்ற கட்டிடம் 2022-ம் ஆண்டுக்குப் பிறகு தொல்பொருள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இந்தியாவின் புராதன சின்னமாகப் பராமரிக்கப்படும். டாடா நிறுவனம் இந்த கட்டடத்தைக் கட்டுவதற்கான திட்டத்தை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுள்ளது.

புதிய நாடாளுமன்றத்தின் அம்சங்கள்:

1) புதிய நாடாளுமன்ற கட்டிடம் 64,000 சதுர மீட்டர் அளவில் கட்டப்படுகிறது.
2) புதிய கட்டிடத்தில் இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு பெரிய அரசியலமைப்பு மண்டபமும் இருக்கும்.
3) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு அறை இதிலேயே இருக்கும்.
4) நூலகம்
5) 1,224 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து விவாதிக்கக் கூடிய அளவிலான மண்டபம் இருக்கும். இப்போது உள்ள கட்டிடத்தில் அதிகபட்சம் 888 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அமர்ந்து விவாதிக்க முடியும்.
6) பல குழு அறைகள்
7) உணவு அருந்தப் பரந்த பகுதி, வாகனங்களை நிறுத்த கூடுதல் வசதி.

தற்போது பயன்பாட்டில் உள்ள நாடாளுமன்றம் குறித்த தெரிந்துகொள்ள வேண்டியவை:

1) ஆங்கிலேயர் காலத்தில் எட்வின் லுடியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் என்பவர்களால் வடிவமைக்கப்பட்டது.
2) 1921-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டி, 1927-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி திறப்பு விழா நடைபெற்றது. அப்போது இந்தியா ஆளுநராக இருந்த லார்டு ஐர்வின் திறந்து வைத்தார்.
3) அப்போது இந்த கட்டிடத்தைக் கட்ட 83 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. கட்டிடப் பணி முடிய 6 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.

ஜோதிடம்57 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!