சினிமா செய்திகள்
திமிரு பிடித்தவள் இந்த நிவேதா
‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமாகி தமிழ் மக்கள் மனதில் நிறைந்தவர் நிவேதா பெத்துராஜ். மதுரையைச் சேர்ந்தவர் இவர்
என்ற காரணத்தினாலேயே அவரை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடுகின்றனர்.
சமீபத்தில் ‘ஜெயம் ரவி’யுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், அதன் பின் இயக்குனர் கணேஷா இயக்கும் புது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
அந்தப் படத்திற்கு ‘திமிரு பிடிச்சவன்’எனப் பெயரிட்டுள்ளனர். இதில் நிவேதா பெத்துராஜ் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் விஜய் ஆண்டனியும் போலீஸாக நடிக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியுள்ளது . இருவரும் போலீஸ் வேடத்தை முதன்முதலில் ஏற்று நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விஜய் ஆண்டனியே இசையமைக்கும் இப்படம் இந்த ஆண்டு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.