தமிழ்நாடு

கோயில் திருடர்களைப் பிடித்த மக்கள்; ‘வெளியே வந்தா செஞ்சிடுவேன்’ என மிரட்டும் களவானிகள் – பகீர் வீடியோ

Published

on

சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு வீடியோ வட்டமிட்டு வருகிறது. அந்த வீடியோவில் கை, கால்கள் கட்டிப் போடப்பட்ட இரண்டு வாலிபர்கள், சுற்றி இருப்பவர்களை மிரட்டுவது போலத் தெரிகிறது. இந்த காணொலி குறித்தான தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. 

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள ஒரு கோயிலில் திருட முயன்றுள்ளது ஒரு மர்ம கும்பல். இதைப் பார்த்தப் பொது மக்கள், திருடர்களை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து திருடர்களின் கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டு, உள்ளூர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்து உள்ளனர் மக்கள். 

இந்த நேரத்தில் திருடர்களில் இருவர், ஊர் மக்களை மிரட்டியுள்ளனர். அவர்கள், ‘எங்கள இப்டி புடிச்சு கொடுக்கிறீங்கல. நாங்க எங்கயும் போக மாட்டோம். இன்னும் கொஞ்ச நாள்ல பெயில்ல வெளிய வந்திடுவோம். அப்பறோம் இந்த ஊரு என்ன ஆகுதுனு மட்டும் பாருங்க’ என்கின்றனர். 

அதற்கு ஒருவர், ‘திருட்டப் பய தானடா நீயி. உனக்கு என்ன அப்டி ஒரு திமிர்ப் பேச்சு’ என்கிறார். 

அதற்கு இன்னும் மூர்க்கமடையும் திருடன், ‘நீ இப்ப என்ன என்னவேனாலும் பண்ணிக்க. எதையும் மறக்க மாட்டேன். வெளிய வருவேன். தோ, இவனும் இன்னும் கொஞ்ச நாள்ல பெயில் கிடைச்சு வெளியே வந்திடுவான். என்ன ஆகுறீங்கன்னு மட்டும் பாருங்க’ என்கிறான். 

இந்த பகீர் கிளப்பும் சம்பவத்தின் மொத்த விஷயங்களும் காணொலியாக பதிவு செய்யப்பட்டு, பார்ப்போரை அதிர வைத்துள்ளது. 

seithichurul

Trending

Exit mobile version