Connect with us

இந்தியா

நகைக்கடையை கொள்ளையடிக்க 15 அடி சுரங்கப்பாதை தோண்டிய திருடர்கள்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்..!

Published

on

நகை கடைக்கு கொள்ளை அடிக்க 15 அடி சுரங்கப்பாதை தோண்டிய திருடர்கள் தங்களது முயற்சி பலனளிக்கவில்லை என்பதை அறிந்து நகைக்கடைக்காரர் இடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்ற சம்பவம் மீரட் நகரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மீரட் நகரில் உள்ள பிரதான பகுதியில் தீபக் என்பவர் நகைக்கடை வைத்து இருக்கிறார். இந்த கடைக்கு திருட இரண்டு கொள்ளையர்கள் முடிவு செய்து பல நாட்கள் ஆக நோட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு கிட்டத்தட்ட 15 நாட்களாக நகை கடைக்கு செல்லும் வகையில் 15 அடி நீளத்தில் சுரங்கம் தோண்டியதாக தெரிகிறது.

இதனை அடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்த தினத்தில் அந்த திருடர்கள் கேஸ் கட்டர்கள் உள்பட ஆயுதங்களை கொண்டு வந்து நகைக்கடையின் கதவை உடைத்து நகை கடைக்குள் நுழைந்தனர். ஆனால் நகைக்கடையில் உள்ள பெட்டகத்தையே அவர்களால் திறக்க முடியவில்லை. கேஸ் கட்டர்கள் இருந்தும் கேஸ் கட்டர் மூலம் அந்த பெட்டகத்தை திறக்க முடியாததால் அவர்கள் தங்கள் கொள்ளை முயற்சியில் தோல்வி அடைந்தனர்.

மேலும் அந்த பெட்டகம் அருகே கிருஷ்ணர் சிலை இருந்தது. அந்த சிலையை அவர்கள் திருப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. நாம் திருடுவதை கடவுள் பார்க்க கூடாது என்பதற்காக அவர்கள் சிலையை திருப்பி வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ஒரு கட்டத்தில் இனிமேல் பெட்டகத்தை திறக்க முடியாது என்று முடிவு செய்ததை அடுத்து அந்த கொள்ளையர்கள் சுவற்றின் மேல் ’சாரி’ என்று எழுதி அதன் பிறகு மாயமாகிவிட்டதாக தெரிகிறது.

மறுநாள் தீபக் தனது நகைக்கடையை திறக்க வந்த போது சுவரில் ஓட்டை போடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பெட்டகத்தில் எந்த நகையும் திருடப்படவில்லை என்பதை அறிந்து அவர் நிம்மதி அடைந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணையை தொடங்கினார்.

சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கையும் திருடர்கள் திருடி சென்று விட்டதால் அந்த பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி கேமராக்கள் மூலம் திருடர்களை அடையாளம் காண முயற்சி செய்தனர். நீண்ட முயற்சிக்கு பிறகு திருடர்கள் சுன்னு மற்றும் முன்னு ஆகிய இருவர் என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இருவரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

நகைக்கடையை கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்கள் அந்த முயற்சி பலனளிக்காததால் நகைக்கடை ஓனருக்கு சாரி சொல்லி விட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!