சினிமா

என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்: அதிதிராவ்

Published

on

படுக்கைக்கு போக மறுத்ததால், 3 பட வாய்ப்புகளை இழந்தேன் என காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்துள்ள நாயகி அதிதி ராவும் இந்த மீடூ இயக்கத்தில், தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார்.

அந்த மூன்று படங்களின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் யார் என்று தெரிவிக்காமல், சற்று மறைத்தே காய் நகர்த்தியுள்ளார் அதிதி ராவ்.

தனக்கு காசை விட மானம் மற்றும் கெளரவம் தான் முக்கியம் என பெற்றோர்கள் சொல்லி வளர்த்ததால், தான் பலரது பாலியல் இச்சைக்கு ஆளாமல் இருக்கிறேன் என வாய்திறந்துள்ளார் அதிதி ராவ்.

அப்படி பார்த்தால், இவருக்கு பதிலாக அந்த படங்களில் கமீட் ஆன மற்ற நடிகைகள் பாலியல் இச்சைகளுக்கு அடிபணிந்து வாய்ப்பை பெற்றனரா என்ற கேள்வியும் எழுகிறதே? இந்த தொடர் குற்றச்சாட்டுக்களுக்கு உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றோர் ஏன் மெளனம் காக்கின்றனர் என்றும், விஷால் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்றும் கேள்விக் குறியாகவே உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version