சினிமா செய்திகள்

நாளை முதல் திரையரங்குகள் திறப்பு: என்னென்ன புதுப்படங்கள் வெளியாக வாய்ப்பு?

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து நாளை முதல் திரையரங்குகளில் திறக்க அனுமதி என்றும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் திரையரங்கு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை திரையரங்குகள் திறக்கப்படுவதை அடுத்து ஏற்கனவே ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர், ஆர்கே சுரேஷ் நடித்த விசித்திரன், ஹரிஷ் கல்யாண் நடித்த ஓமண பெண்ணே, மிர்ச்சி சிவா நடித்த இடியட், பிரபுதேவா நடித்த பாகீதரா, அசோக்செல்வன் நடித்த ஹாஸ்டல், கௌதம் மேனன் இயக்கிய ஜோஸ்வா இமைபோல் காக்க, மிர்ச்சி சிவா நடித்த சுமோ, அருண்விஜய் நடித்த சினம் ஆகிய படங்களின் ரிலீஸ் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

அதேபோல் சசிகுமார் நடித்த கொம்பு வச்ச சிங்கம், எஸ்ஜே சூர்யா நடித்த பொம்மை, விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன், ஜிவி பிரகாஷ் நடித்த ஆயிரம் ஜென்மங்கள், சசிகுமார் நடித்த ராஜவம்சம், விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் நடித்த அக்னி சிறகுகள், மோகன்ஜி இயக்கிய ருத்ரதாண்டவம், லாஸ்லியா, அர்ஜுன் நடித்த பிரண்ட்ஷிப், சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ், சந்தானம் நடித்த சபாபதி, காஜல் அகர்வால் நடித்த கருங்காப்பியம், விஜய் சேதுபதி நடித்த மாமனிதன், உள்பட பல படங்களை திரையிடுவதற்கு தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி ஏற்கனவே ஓடிடியில் வெளியான சார்பாட்டா பரம்பரை மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் 2 ஆகிய திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டதால் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version