சினிமா செய்திகள்

இந்த கண் பேசும் வார்த்தைகள் புரியாது – செல்வராகவன் பிறந்த நாள் இன்று!

Published

on

90களில் பிறந்தவர்கள், இவரது படத்தை பார்த்துத் தான் காதலின் புதிய பரிமாணத்தை கற்றுக் கொண்டு இருப்பர். இவரது படத்தில் இடம்பெற்ற பாடல்களை முணுமுணுக்காத உதடுகளும் இருக்க முடியாது. காதல் கொண்டேன் கிளைமேக்ஸில் வரும் திவ்யா திவ்யா என்ற வசனத்தை நண்பர்கள் வட்டாரத்தில், அதே பைத்தியமான தனுஷ் போல நடித்தும் இருப்பார்கள்.

தந்தை கஸ்தூரி ராஜா கடனில் ஆழ்ந்திருக்கும் போது, தந்தைக்கு துள்ளுவதோ இளமை கதையை எழுதி கொடுத்து, தம்பி தனுஷை நடிக்க வைத்த ஜாம்பவான் செல்வராகவனின் பிறந்த நாள் இன்று.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என பல வித்தியாசமான படங்களை இயக்கி இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர்.

ஆனால், எந்த படமும் இவருக்கான அங்கிகாரத்தை அந்த படங்கள் வெளியாகும் காலகட்டத்தில் கொடுக்காமல், போய், அண்டர்ரேட்டட் இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

இவரது அறிமுகமான இவரது தம்பி தனுஷ் சூப்பர்ஸ்டாரின் மருமகனாகவும், தேசிய விருது வென்ற நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வளர்ந்து நிற்க, ஏணியாய் இருந்தவர் அண்ணன் செல்வராகவன் தான்.

தேவதை கண்டேன், கண்பேசும் வார்த்தைகள், பாடல்களை யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்து கறந்து இளைஞர்களுக்கு கொடுத்தவரும் இவர்தான்.

இவரது இயக்கத்தில் புதுப்பேட்டை 2 படத்திற்காகவும், ஆயிரத்தில் ஒருவன் 2விற்காகவும், தமிழ் இளைஞர்கள் ஆல்வேஸ் வெயிட்டிங்!

seithichurul

Trending

Exit mobile version