Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தின் இந்த 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் – உண்மையை உடைத்த அரசு!

Published

on

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாட்டில் உள்ள 19 மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகமும் ஒரு மாநிலமாக இருக்கிறது. இந்த ‘கொரோனாவின் இரண்டாவது அலையை’ திறம்பட சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து நேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடினார். 

அப்போது பிரதமர் மோடி, ‘நாட்டில் இப்போது பரவி வரும் கொரோனா தொற்றைத் தடுக்கவில்லை என்றால் நாட்டில் மீண்டும் வைரஸ் பரவல் அதிகரிக்கக் கூடும். தற்போது உருவாகி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை நாம் எடுத்தாக வேண்டும். 

கொரோனாவை எதிர்த்து நாம் போராடியதன் மூலம் பெற்ற தன்னம்பிக்கை, அதீத நம்பிக்கையாக மாறிவிடக் கூடாது. நம் வெற்றி என்பது தவறான பாதையில் வழிநடத்தும்படி செய்துவிடக் கூடாது. கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் மக்கள் பீதியடையாமலும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்றார். 

இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ள தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், ‘தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகமாக இருப்பது உண்மை தான். இந்தப் பரவலுக்குக் காரணம் மக்கள் அதிகமாக கூடும் திருமண நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவையே. இந்தக் கூட்டங்களை நடத்துவதால் எவ்விதப் பிரச்சனைகளும் இல்லை. அதே நேரத்தில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மக்கள் நடந்து கொள்ள வேண்டும். முக்கியமாக மக்கள் மாஸ்க் அணிய வேண்டும். 

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது’ என்றார். 

ஆன்மீகம்24 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்35 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்56 நிமிடங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!